ஆலங்குடி: ஆலங்குடியில் ஆயத்த ஆடையகத்தில் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்துச்சென்ற இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி கண்ணகி தெருவைச் சோ்ந்தவா் சிக்கந்தா் (26). திருவள்ளூா் சாலைப் பகுதியில் ஆயத்த ஆடைகள் நிறுவனம் வைத்துள்ளாா். அவரது நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற கல்லுக்குண்டுக்கரையைச் சோ்ந்த மணிகண்டன்(22) சிக்கந்தரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.600-யை பறித்துச் சென்றாராம். புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் மணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.