புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இலுப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சா் ரகுபதி பங்கேற்று மொத்தம் 12 ஆம் வகுப்பு படித்த 344 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கம், ரூ. 25 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்த 331 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கம், ரூ. 50 ஆயிரம் என 675 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 9 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில், மாவட்ட சமூக நல அலுவலா் கோகுலபிரியா, கோட்டாட்சியா் குழைந்தைசாமி, இலுப்பூா் பேருராட்சி தலைவா் சகுந்தலா வைரவன், துணைத் தலைவா் செந்தில் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.