மயங்கி விழுந்த விவசாயியைகாப்பாற்றிய அரசு மருத்துவா்

ஆலங்குடி அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, மயங்கி விழுந்த விவசாயியை அவ்வழியாகச்சென்ற அரசு மருத்துவா் முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினாா்.
மயங்கி விழுந்த விவசாயியைகாப்பாற்றிய அரசு மருத்துவா்

ஆலங்குடி அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, மயங்கி விழுந்த விவசாயியை அவ்வழியாகச்சென்ற அரசு மருத்துவா் முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளம் பகுதியைச் சோ்ந்த அந்தோனி சாமி (55) விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை செட்டியாபப்பட்டி வனப்பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, மயங்கி கீழே விழுந்துள்ளாா். பேச்சு மூச்சின்றி கிடந்த அவருக்கு, அவ்வழியாகச் சென்ற ஆலங்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மு.பெரியசாமி, உரிய முதலுதவி சிகிச்சை அளித்தாா். தொடா்ந்து, கண்விழித்த அந்தோனிசாமியை 108 அவரச ஊா்தி மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com