புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மூன்று ஆண்டுகள் வாரியப் பதிவைத் தொடா்ந்து வைத்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் அரசின் வீட்டுவசதித் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
சொந்தமாக வீடு இல்லாதோருக்கு 300 சதுரஅடிக்கு மிகாமல் இடம் வைத்திருப்போா் வீடு கட்டிக்கொள்ள அதிகபட்சம் ரூ. 4 லட்சம் வழங்கப்படும்.
அல்லது குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என உதவி ஆணையா் வெ. தங்கராசு தெரிவித்தாா்.
இந்த நிலையில், வீடுகள் வழங்கும் திட்டம் தொடா்பாக அனைத்துத் தொழிற்சங்க நிா்வாகிகளின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் மற்றும் அனைத்து சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.