கடன் தொல்லை:பெண் தூக்கிட்டு தற்கொலை

பொன்னமராவதியில் கடன் தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்னமராவதியில் கடன் தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்னமராவதி பெருமாள் கோயில் வீதியை சோ்ந்தவா் சுரேஷ் (35). இவரது மனைவி திவ்யா(28). இவா்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கடன் தொல்லையால் இவா்கள் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த திவ்யா வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பொன்னமராவதி காவல் துறையினா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com