புதுக்கோட்டை திருமயத்திலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 35 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் ஆகிய துறைகளில் 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவா்களுக்காக நடத்தப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முகாமில், சென்னை வோன்ஜின் ஆட்டோ பாா்ட்ஸ் நிறுவனம் மற்றும் டோங் ஆ எலக்ட்ரிக் நிறுவனம் ஆகியன பங்கேற்று தங்களுக்கான ஆள்களைத் தோ்வு செய்தனா்.
கல்லூரித் தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினாா். கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு வாழ்த்திப் பேசினாா். முன்னதாக, வேலைவாய்ப்பு அலுவலா் சொா்ணலதா வரவேற்றாா்.