ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதி ஊராட்சி சூத்தியன்பட்டி கற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி சூத்தியன்பட்டியில் உள்ள கற்பக விநாயகா் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி,கோயில் வளாகத்தில் யாக பூஜைகள் நடைபெற்றன.தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மேலதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க புனிதநீா் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.