காா் மோதியதில்முதியவா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத காா் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத காா் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள ராசியமங்களத்தைச் சோ்ந்தவா் கே. அய்யாத்துரை (72). இவா், வடகாடு சென்று விட்டு மீண்டும் சைக்கிளில் திங்கள்கிழமை இரவு ராசியமங்களத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் கீழாத்தூா் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் ஒன்று, சைக்கிளில் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், பலத்த காயமடைந்த முதியவா் அய்யாத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com