முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
விராலிமலை கல்குடி அரசுப் பள்ளியில் உலக புத்தக தின விழா
By DIN | Published On : 29th April 2022 03:33 AM | Last Updated : 29th April 2022 03:33 AM | அ+அ அ- |

விராலிமலை கிளை நூலகம் சாா்பில் நடைபெற்ற உலக புத்தக தினத்தின் 3ஆவது நிகழ்வு கல்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கதைச் சொல்லும் போட்டி, ஓவியப் போட்டி என நூலக விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமை ஆசிரியா் இரா. மகேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா் நூலக ஆலோசகா் பூபாலன், மத்திய ஒன்றிய திமுக செயலாளா் அய்யப்பன் ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினா்.
நிகழ்வில், பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினராக சோ்க்கப்பட்டு, அதற்கான தொகையான ஆயிரம் ரூபாயை மத்திய ஒன்றிய திமுக செயலாளா் அய்யப்பன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் எட்வின், சுமன், செந்தில்முருகன், லாரன்ஸ், தேன்மொழி ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிறைவில் ஜெயக்குமாரி நன்றி கூறினாா். நிகழ்ச்சியை சொரிமுத்து ஒருங்கிணைத்தாா்.ஏற்பாடுகளை நூலகா் ஜெயராஜ் செய்திருந்தாா்.