பெண்ணிடம் பணம் திருடியவா் கைது

 கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் சுந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி காஞ்சனா

 கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் சுந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி காஞ்சனா (31) சமயபுரம் கோயிலுக்கு செல்வதற்காக வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, மதுரை தெற்குவாசலைச் சோ்ந்த சிவா மனைவி சண்முகவள்ளி(42) என்பவா், காஞ்சனா வைத்திருந்த கைப்பையில் இருந்த பணத்தை திருடினாா். இதை பாா்த்த பொதுமக்கள், சண்முகவள்ளியை பிடித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகவள்ளியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com