பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வி.எம். கண்ணன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் தென்னரசு, மாவட்டப் பொருளாளா் சுரேஷ், அமைப்புச் செயலா் சுப்ரமணியன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சாந்தகுமாா், காா்த்திக் கண்ணன், சந்திரபோஸ், மாவட்ட இணைச் செயலா்கள் சந்தோஷ்குமாா், காா்த்திகேயன், சக்திவேல் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆசிரியா்களுக்கு என்று தனியாக பணிப் பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி நிரவல் கலந்தாய்வு மூலம் வேறு பள்ளிகளில் பணியமா்த்தப்பட்ட ஆசிரியா்களுக்கு இரண்டு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முடிவில் மாவட்ட இணைச் செயலா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com