விராலிமலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் தொழிற்சாலை ஊழியா் சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூா் நாவக்கோன்பட்டியைச் சோ்ந்தவா் கொன்னப்பகோனாா் மகன் கணேசன் (45). இவா், விராலிமலையில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை தொழிற்சாலை எதிரே உள்ள சாலையைக் கடக்கும் முற்பட்டாா். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், மோதியதில் நிகழ்விடத்திலேயே கணேசன் உயிரிழந்தாா். விபத்து குறித்துத் தகவலறிந்த விராலிமலை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.