புதுக்கோட்டையில் திமுக தலைவா் மு. கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திமுகவினா் அமைதி ஊா்வலம் நடத்தி அவரது சிலைக்கு மாலை அணிவித்தனா்.
புதுக்கோட்டை நகர திமுக சாா்பில் நகரச் செயலா் செந்தில் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெற்று, மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தனா். முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.