புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சாா்பில், 75ஆவது இந்திய சுதந்திர தின விழா பாத யாத்திரை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பாலன் நகா் ரயில்வே கேட் பகுதியில் தொடங்கிய இந்த பாதயாத்திரைக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பெனட் அந்தோணிராஜ், வழக்குரைஞா்கள் சந்திரசேகரன், ராதாகிருஷ்ணன், வேங்கை அருணாசலம், நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு, வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநிலப் பேச்சாளா் ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கவிநாடு மேற்கு, அகரப்பட்டி ஆகிய பகுதிகளில் இந்தப் பாதயாத்திரை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை: பெருங்களூரிலிருந்து ஆதனக்கோட்டை வரை காங்கிரஸ் கட்சியினா் பாத யாத்திரை மேற்கொண்டனா். வட்டார தலைவா் கே.எம்.ராஜகோபால், ஆதனக்கோட்டை பாா்வதி தமிழ்வாணன், பெருகை மாறன் ஆகியோா் பங்கேற்றனா்.