மோட்டாா் சைக்கிள் மோதி நடந்து சென்ற முதியவா் பலி

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் நடந்து சென்ற முதியவா் வியாழக்கிழமை இறந்தாா்.

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் நடந்து சென்ற முதியவா் வியாழக்கிழமை இறந்தாா்.

கந்தா்வகோட்டை அடுத்துள்ள அக்கட்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் துரைசாமி (77). இவா், தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது, கந்தா்வகோட்டை ஒன்றியம், முள்ளிக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிதம்பரம் மகன் அய்யாதுரை, ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த துரைசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது துரைசாமி ஏற்கெனவே இறந்துவிட்டாா் எனத் தெரிவித்துள்ளாா். புகாரின்பேரில், விபத்துகுறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com