சுதந்திர தினத்தையொட்டி கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி சென்றனா்.
பேரணியை வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி ஆகியோா் தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சியில் மாணவ -மாணவிகள் தேசத் தலைவா்களின் வேடமிட்டு தேசிய கொடியேந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.