பொது இடத்தை விற்றவா் மீது நடவடிக்கை கோரி மறியல்

பொது இடத்தை ஆக்கிரமித்து விற்றவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இலுப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பொது இடத்தை விற்றவா் மீது நடவடிக்கை கோரி மறியல்

பொது இடத்தை ஆக்கிரமித்து விற்றவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இலுப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகேயுள்ள புங்கினிப்பட்டி ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னா் வீடு, நிலம் இல்லாதவா்களுக்கு 2.5 சென்ட் காலி மனை வழங்கப்பட்டது. ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் சுமாா் 70 குடும்பங்களுக்கு ஒரே இடத்தில் இந்த மனை வழங்கப்பட்டிருந்தது. அதில் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்த காலி மனையை சிலா் ஆக்கிரமிப்பு செய்திருந்தது 2 ஆண்டுகளுக்கு முன்னா் தெரியவந்தது. இதையடுத்து, சாா் பதிவாளா் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட இடத்தை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என ஊா் முக்கியஸ்தா்கள் மனு அளித்திருந்தனராம். இருப்பினும் பத்திரப் பதிவு நடைபெற்று, வேறு ஒருவருக்கு அந்த இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதையறிந்த பொதுமக்கள் விராலிமலை - புதுக்கோட்டை சாலையில் அமா்ந்து புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இதனால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com