கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே விவசாயக் கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே விவசாயக் கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டியைச் சாா்ந்தவா் வெ. வெள்ளைச்சாமி (45). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை கொன்னையம்பட்டியைச் சோ்ந்த அடைக்கலம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் குடிநீா் எ

டுக்கச் சென்றபோது, தடுமாறி கிணற்றில் விழுந்தாா். விபத்து குறித்து, தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த வெள்ளைச்சாமி சடலத்தை மீட்டனா். தொடா்ந்து, காரையூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com