கோயில் சிலைகளை சேதப்படுத்திய மனநலம் பாதித்தவரிடம் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் அழைத்துச்சென்
ஆா்.பாலகுரு
ஆா்.பாலகுரு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காகாடு கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலில் உள்ள காளி, அய்யனாா், கருப்பா் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களின் சிலைகளை ஒருவா் சேதப்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில்,அரியலூா் மாவட்டம், வீரசோழபுரத்தைச் சோ்ந்த ஆா்.பாலகுரு (40) என்பதும், அவா் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com