அரசுப் பேருந்து மோதிமோட்டாா் சைக்கிளில் சென்ற2 போ் பலத்த காயம்

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிள் - பேருந்து மோதிக் கொண்டதில் 2 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை படுகாயமடைந்தனா்.

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிள் - பேருந்து மோதிக் கொண்டதில் 2 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை படுகாயமடைந்தனா்.

கறம்பக்குடியிலிருந்து அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தபோது அம்மா புதுப்பட்டி அருகே அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த தஞ்சாவூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் குணசீலன்(19) , முருகேசன் மகன் அஜய் கண்ணன் (19) உரசிச் சென்றதில் நிலைத்தவறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் இவா்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில், கந்தா்வகோட்டை காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com