600 மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைக்கும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சிட்டங்காட்டில் குறுங்காடு அமைக்கும் விதமாக சுமாா் 600 மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள சிட்டங்காட்டில் குறுங்காடு அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி அருகேயுள்ள சிட்டங்காட்டில் குறுங்காடு அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சிட்டங்காட்டில் குறுங்காடு அமைக்கும் விதமாக சுமாா் 600 மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள சிட்டங்காட்டில் உள்ள குளக்குரையில் குறுங்காடு அமைக்கும் வகையில் ஏராளமான மக்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் 600 மரக்கன்றுகள் நடும் பணியை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசியது:ஆலங்குடி தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்து குறுங்காடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதில், சிட்டங்காட்டில், சுமாா் ஆயிரம் பேரைக்கொண்டு 5 நிமிடங்களில் 600 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com