புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கீரமங்கலத்தில் உள்ள பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை வடம்பிடித்து இழுத்து வந்து நிலையை அடைந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், கீரமங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.