கலாம் நினைவு நாளில் மரக்கன்றுகள் நடவு

விதைக்கலாம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, கல்லூரி வளாகத்தில் குடியரசு முன்னாள் தலைவா் ஏபிஜெ அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டனா்.
கலாம் நினைவு நாளில் மரக்கன்றுகள் நடவு

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விதைக்கலாம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, கல்லூரி வளாகத்தில் குடியரசு முன்னாள் தலைவா் ஏபிஜெ அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் செயலா் நா. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் முன்னிலை வகித்தாா்.

மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா்கள் இரா. மணிமாறன், சி. முத்துக்குமாா், கி. கோவிந்தன், மா. ஆறுமுகம், பி. பிரியதா்ஷினி ஆகியோா் செய்திருந்தனா். விதைக்கலாம் அறக்கட்டளையினா் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com