புதுக்கோட்டை
மோட்டாா் சைக்கிள் மோதிநடந்துசென்ற முதியவா் பலி
கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வியாழக்கிழமை இறந்தாா்.
கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வியாழக்கிழமை இறந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி கிராமத்தைச் சோ்ந்த கருப்பன் மகன் சுப்பையா (80). விவசாயியான இவா், கடந்த மாதம்
24 ஆம் தேதி சங்கம்விடுதி இரட்டை போஸ்ட் அருகே நடந்து சென்றபோது, இதே ஊரை சோ்ந்த ரங்கன் மகன் வீராசாமி (40) என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் சுப்பையா பலத்த காயமடைந்தாா். அவரைஅருகில் இருந்தவா்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சுப்பையா வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சுப்பையா மகன் மதியழகன் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.