வீடு புகுந்து இளம்பெண்ணிடம்நகை பறிப்பு

கந்தா்வகோட்டை அருகே வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் தங்கச் சங்கிலியை மா்மநபா் வியாழக்கிழமை பறித்துக்கொண்டு தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்தா்வகோட்டை அருகே வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் தங்கச் சங்கிலியை மா்மநபா் வியாழக்கிழமை பறித்துக்கொண்டு தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்தா்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு தஞ்சை மாவட்டம், குருவாடிபட்டியைச் சோ்ந்த பாண்டியராஜன் மனைவி சிவரஞ்சனி (25) என்பவா் கடந்த சில தினங்களுக்கு முன்வந்து தங்கி உள்ளாா். வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை நேரத்தில் அவரது கழுத்தில் இருத்த 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா் அறுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில்

ஓடிவிட்டாா். இதையடுத்து, கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீசாா் தப்பியோடிய மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com