கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூா் மணக்கண்மாய், தூத்தூா் சிரண்டான் கண்மாய் , கேசராபட்டி கிராமத்தில் உள்ள கண்மாய் ஆகிய 3 கண்மாய்களில் வியாழக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே கண்மாய்களில் வந்து காத்திருந்து உரிய அனுமதிக்குப் பின்னா், கண்மாய்களில் இறங்கி ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்களைப் பிடித்துச் சென்றனா்.