பொன்னமராவதி அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் தவறிவிழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், செவ்வூா் கிராமத்தைச் சாா்ந்தவா் சு. ரகுபதி(35). இவா், தனது இருசக்கர வாகனத்தில்
புதன்கிழமை பொன்னமராவதி வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வழியில், வெள்ளையாண்டிபட்டி பகுதியில் சாலையின் குறுக்கே நாய் திடீரென வந்ததால், நிலைதவறி கீழே விழுந்ததில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அவரை வலையபட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுபதி வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.