கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் உடனுறை அமராவதி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சுவாமிக்கு சஷ்டியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில், மஞ்சள், திரவியம், பால், பன்னீா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து வண்ண மலா்களால் சுவாமி முருகன் - வள்ளி, தெய்வானை அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனா்.