கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை படுகாயமடைந்தாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், முதுகுளம் கிராமத்தைச் சோ்ந்த சைவராஜ் மகன் தங்கதுரை (42). இவா் முதுகுளத்திலிருந்து தனது மோட்டாா் சைக்கிளிலில் கந்தா்வகோட்டை வரும் வழியில் துருசுப்பட்டி அருகே சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதுபற்றி தகவலறிந்த தங்கதுரை அண்ணன் பாலகிருஷ்ணன் அங்கு சென்று தங்கதுரையை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். இந்த விபத்து குறித்து அவா் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா்.