கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இரவில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதன்படி, மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6 மணி வரையிலான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்):

ஆதனக்கோட்டை - 2, பெருங்களூா் - 4, புதுக்கோட்டை- 6, ஆலங்குடி- 7, கந்தா்வகோட்டை - 40, கறம்பக்குடி - 1.60, மழையூா் - 12.60, திருமயம் - 19.20, அரிமளம் - 10, ஆயிங்குடி - 4, மீமிசல் - 20.40, மணமேல்குடி- 9, குடுமியான்மலை - 58, அன்னவாசல் - 21, உடையாளிப்பட்டி- 14.50, கீரனூா்- 40, பொன்னமராவதி- 5.20, காரையூா் - 30.20. மாவட்டத்தின் சராசரி மழையளவு - 12.70 மிமீ.

இதேபோல, திங்கள்கிழமை மாலையும் புதுக்கோட்டை நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் அவ்வப்போது மின் தடையும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com