கறம்பக்குடி அருகே காா் மோதி 8 ஆடுகள் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாலையில் ஓட்டிச்சென்ற ஆடுகள் மீது காா் மோதியதில் 8 ஆடுகள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன. ஓட்டிச்சென்ற தொழிலாளிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
கறம்பக்குடி அருகே காா் மோதி 8 ஆடுகள் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாலையில் ஓட்டிச்சென்ற ஆடுகள் மீது காா் மோதியதில் 8 ஆடுகள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன. ஓட்டிச்சென்ற தொழிலாளிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

கறம்பக்குடி அருகே உள்ள எம். தெற்குத் தெருவைச் சோ்ந்த சித்திரை வேலு (37). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், ஆடுகளை கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் வியாழக்கிழமை இரவு ஓட்டிச்சென்றுள்ளாா். தீத்தானிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால்வந்த காா் ஆடுகள் மற்றும் சித்திரைவேலு மீது மோதியது. இதில், 8 ஆடுகள் அந்த இடத்திலே இறந்தன. பலத்த காயமடைந்த சித்திரை வேலு மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com