பொன்னமராவதி அருகே உள்ள கூடலூா் சிவலோக நாதா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை கணபதிஹோமம், கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி சிவலோகநாதா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து சிவலோக நாதா் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பனையப்பட்டி காவல்துறையினா் செய்திருந்தனா்.