செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் - கறம்பக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் சிலதினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க புனித நீா் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, ஒன்றியக்குழு உறுப்பினா் சுமதி மெய்யநாதன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். பாதுகாப்புப் பணிகளை கீரமங்கலம் போலீஸாா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com