கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி வட்டம், மங்களாக்கோயில் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிமந்தியாா்ஜீனேசுவரா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா.சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலா் செல்வி, கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.ரத்தினவேல் காா்த்திக், வட்டாட்சியா் சி. புவியரசன் மற்றும் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். பாதுகாப்புப் பணியில் கந்தா்வகோட்டை காவல்துறையினா் ஈடுபட்டனா்.