இலுப்பூா் பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பெருமாள் - தாயாா் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கி
இலுப்பூா் பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பெருமாள் - தாயாா் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

இலுப்பூா் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பிரம்மோற்ஸவ விழா, தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். தொற்றால் கடந்த 3 ஆண்டுகளாக தடைபட்டிருந்த திருவிழா நிகழாண்டுக்கான விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து தினமும் உபயதாரா்கள் சாா்பில் மண்டகப்படி விழா நடைபெற்றது. விழா நாட்களில் உத்ஸவா் வெங்கடேசப் பெருமாள் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழாவின் 7 ஆம் நாளான சனிக்கிழமை பெருமாள் - தாயாா் திருக்கல்யாணம் வைபவம் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் துணை காவல் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு தலைமையில் போலீசாா் ஈடுபட்டு வருகின்றனா். ஏற்பாடுகளை விழா குழுவினா், மண்டகப்படிதாரா்கள், இலுப்பூா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com