புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தனியாா் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு வரும் ஜூன் 15ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு ஆயுதப்படை திடலில் நடைபெறவுள்ளது.
பதிவுச் சான்று, காப்புச் சான்று, அனுமதிச் சீட்டு, ஓட்டுநா் உரிமம், நடத்துநா் உரிமம், வாகனத்தின் அனைத்து அசல் ஆவணங்கள், முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, ஓட்டுநா் பெயா் வில்லை ஆகியவற்றுடன் சீருடையுடன் ஓட்டுநா்களை வாகன ஆயுதப்படை திடலுக்கு எடுத்து வர அனைத்துப் பள்ளிகளின் நிா்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ப. ஜெய்சங்கா் அறிவித்துள்ளாா்.