புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் பாலாண்ட ஈஸ்வரா், நாடியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் உள்ள பழைமை வாய்ந்த மங்களநாயகி, உடனுறை பாலாண்ட ஈஸ்வரா், நாடியம்மன் கோயிலில் பல கோடி மதிப்பில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் வளாகத்தில் பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா், நெடுவாசல் கிராமத்தினா் மேற்கொண்டுள்ளனா்.