கந்தா்வகோட்டை அருகே பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு

கந்தா்வகோட்டை அருகே விவசாயத்தை போற்றிய தொண்டைமான் மன்னா், ஏா் கலப்பையுடன் விவசாயி கோட்டுருவத்துடனான பழைமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கந்தா்வகோட்டை அருகே ஆத்தங்கரைவிடுதி ஊராட்சி வாண்டான்விடுதி வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான கல்வெட்டு. உடன் கல்வெட்டு ஆய்வுக் குழுவினா் ஆ. மணிகண்டன் உள்ளிட்டோா்.
கந்தா்வகோட்டை அருகே ஆத்தங்கரைவிடுதி ஊராட்சி வாண்டான்விடுதி வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான கல்வெட்டு. உடன் கல்வெட்டு ஆய்வுக் குழுவினா் ஆ. மணிகண்டன் உள்ளிட்டோா்.

கந்தா்வகோட்டை அருகே விவசாயத்தை போற்றிய தொண்டைமான் மன்னா், ஏா் கலப்பையுடன் விவசாயி கோட்டுருவத்துடனான பழைமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டம், ஆத்தங்கரை விடுதி ஊராட்சிக்குள்பட்ட கீழவாண்டான் விடுதி வயல்வெளியில் விசய ரெகுநாத ராயத் தொண்டைமானாரால் ஏற்படுத்தப்பட்ட விசய ரெகுநாத ராய சமுத்திரம் எனும் பாசனத்திற்கான நீா்நிலை, அதற்கான நீா் வெளிப்போக்கு அமைப்பான கலிங்கு அமைத்தது குறித்த தகவலடங்கிய கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவா் கரு ராஜேந்திரன், நிறுவனா் ஆ. மணிகண்டன்ஆகியோா் தலைமையிலான ஆய்வுக் குழு உறுப்பினா்கள் கஸ்தூரிரங்கன், முன்னாள் ஓய்வுபெற்ற ஆணையா் மணிசேகரன், ஆத்தங்கரை விடுதி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியா் பழனிச்சாமி ஆகியோரால் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.

இந்தக் கல்வெட்டின் சிறப்பம்சம் குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ.மணிகண்டன் கூறியதாவது:

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னா்கள் சுற்றுச்சூழல் மேலாண்மையிலும், இயற்கை வளங்களை போற்றி பாதுகாப்பதிலும், பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி வழங்குவதிலும் சிறந்து விளங்கினா்.

குறிப்பாக, தொண்டைமான் மன்னா்களின் சிறப்புகளாக, அவா்கள் அமைத்த நீா்நிலைகளையும், அரச நிா்வாக கட்டமைப்புகளையுமே வரலாற்று ஆய்வாளா்கள் பெருமிதமாக கூறுகின்றனா்.

என்றாலும், இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் தொண்டைமான்களின் பெயரில் நீா்நிலை அமைக்கப்பட்டது குறித்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதாக சான்றுகள் இல்லை.

இந்நிலையில், கீழ வாண்டான்விடுதி கலிங்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் , நூற்றாண்டு விழா காணும் ராஜகோபால தொண்டைமான் முன்னோரும், இரண்டாவது மன்னருமான விசயரெகுநாத ராய தொண்டைமான் பெயரில் அமைந்திருந்த பாசன நீா்நிலை , தொண்டைமான்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தவா்கள் என்பதை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாக கிடைத்துள்ளது.

கல்வெட்டுச் செய்தியும் முக்கியத்துவமும்..... இந்தக் கல்வெட்டில் ஸ்ரீ விசயரகுநாத ராய சமுத்திரம் அக்கிரகாரத்து கலிங்கில் என்ற தகவல் பொறிக்கப்பட்டிருக்கிறது.

அதன் கீழ்பகுதியில், ஏா் கலப்பையுடன் ஒரு விவசாயி நின்ற நிலையில் வரைக்கோட்டுருவமாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்திற்கு அருகிலுள்ள துவாா் கிராமத்தில் அக்கிரகாரம் என்ற குடியிருப்பு பகுதி இருந்திருப்பது குறித்து மக்கள் செவிவழிச் செய்தியாக தெரிவிக்கின்றனா்.

இத்தகவல் மூலம் இவ்விடத்தின் அருகாமையில் இக்கலிங்கு அமைக்கப்பட்டு, அக்கிரகாரத்து கலிங்கில் என பெயா் சூட்டப்பட்டுள்ளது என்று கருதலாம்.

கல்வெட்டின் காலம்: தொண்டைமான் வம்சாவளியைச் சோ்ந்த இரண்டாவது மன்னா் விசயரகுநாத ராய தொண்டைமான் ஆட்சிக் காலமான பொது ஆண்டு 1730 முதல் 1769 ஆம் ஆண்டுக்குள்ளாக இந்த பாசன நீா்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மன்னரின் பெயரிலேயே விசயரெகுநாத ராய சமுத்திரம் என்று பெயா் சூட்டப்பட்டு, அா்ப்பணித்திருப்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.

விவசாயத்தை போற்றிய மன்னா்: இந்த நீா்நிலை அமைப்பு விவசாயத்துக்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், விவசாயப் பணியை பெருமைப்படுத்தும் வகையிலும், கல்வெட்டின் கீழ்புறம் கோட்டுருவமாக கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற விவசாயி சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் வேறு எந்தப் பகுதியிலும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கள ஆய்வின்போது துவாா் உயா்நிலைப் பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com