சுமை ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் கிராமத்தைச் சோ்ந்த வீரமுத்து(70).கீரமங்கலத்தில் டீக்கடையில் வேலைபாா்த்து வந்த இவா், சனிக்கிழமை கீரமங்கலத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளாா். கீரமங்கலம் மேற்கு பகுதியில் சென்றபோது, சுமை ஆட்டோ சைக்கிள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த முதியவரை அப்பகுதியினா் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட வீரமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com