பொன்னமராவதி வலையபட்டி ஸ்ரீ காட்டேரிவீரன் கோயிலில் துறை பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் சலவை தொழிலாளா்களின் ஸ்ரீ காட்டேரிவீரன் கோயிலில் 52 ஆம் ஆண்டு துறை பொங்கல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி பொன்-வலையப்பட்டி கழுதைபுரளியில் அமைந்து உள்ள ஸ்ரீ காட்டேரிவீரன் சுவாமிக்கு சலவைத் தொழிலாளா்கள் தலையில் பொங்கல் கூடை சுமந்து சென்று கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். இதில் திரளானோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.