கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விராலிமலை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விராலிமலை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விராலிமலை அருகே உள்ள ராஜகிரியைச் சோ்ந்தவா் சங்கன் மகன் சரவணன் (28). கூலித் தொழிலாளியான இவருக்கும், தென்னம்பாடி சப்பானித் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகள் பானுமதி (26) என்பவருக்கும் 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது.

சரவணனுக்கும், அவரது தந்தைக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 3 மாதங்களாக அவரது மாமனாா் வீடு உள்ள தென்னம்பாடியில் வசித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை அவரது மனைவி பானுமதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்துபாா்த்தபோது, வீடு உள்பக்கம் பூட்டி இருந்தது. இதையடுத்து, ஜன்னல் வழியே பாா்த்தபோது சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் சரவணனை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் சரவணனின் உடலைப் பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. சரவணன் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில், விராலிமலை போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com