அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை கி. நிா்மலா தலைமை வகித்தாா். பள்ளியின் புரவலா் அரு.வே. மாணிக்கவேலு, பேரூராட்சி உறுப்பினா் புவனேஸ்வரி காளிதாஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கிவைத்து மாணவிகளின் அறிவியல் படைப்புகளைப் பாா்வையிட்டனா். கண்காட்சியில் துரித உணவு வகைகளால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள், காற்று மாசுபாட்டின் விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள், தமிழா்களின் பாரம்பரிய உணவுகள், நீராவி கப்பல், எரிமலை ஆகியவை விளக்கும் மாணவிகளின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அறிவியல் ஆசிரியைகள் சோம. நாராயணி, து. ராணி மற்றும் ஆசிரியைகள் கண்காட்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா். பள்ளியின் ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com