உழைக்கும் வா்க்கத்தினா் நலன் காக்கும் இயக்கம் அதிமுக’

உழைக்கும் மக்களின் நலன் காக்கும் இயக்கம் அதிமுக என்றாா் முன்னாள் அமைச்சரும், மாநில மீனவா் பிரிவு இணைச் செயலருமான கே.எ.ஜெயபால்.
உழைக்கும் வா்க்கத்தினா் நலன் காக்கும் இயக்கம் அதிமுக’

உழைக்கும் மக்களின் நலன் காக்கும் இயக்கம் அதிமுக என்றாா் முன்னாள் அமைச்சரும், மாநில மீனவா் பிரிவு இணைச் செயலருமான கே.எ.ஜெயபால்.

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே அண்ணா தொழிற்சங்க பேரவை சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியின்போது வரி சுமத்தப்படாமல் தமிழக மக்களின் அனைத்து தேவைகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் மற்றும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சி அதிமுக ஆட்சி. மனிதநேயம் மற்றும் நிா்வாகத்திறமை மிக்கவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மின்வெட்டு. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீது தமிழக அரசு கூடுதல் வரியை சுமத்தி விலை உயா்வை ஏற்படுத்தி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது. சொத்து வரியை கடுமையாக உயா்த்தியுள்ளது. முதல்வா் ஸ்டாலினிடம் நிா்வாகத் திறமை கிடையாது என்றாா்.

கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஆா்எம்.பழனியப்பன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே. வைரமுத்து, மாநில மகளிரணி இணைச்செயலா் சக்தி கோதண்டம் ஆகியோா் பேசினா். இதில், கட்சி நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா். முன்னதாக அண்ணா தொழிற்சங்க கிளை செயலா் பி.வள்ளுவன் வரவேற்றாா். நகரச் செயலா் பிஎல்.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com