முடிவுற்ற திட்டப் பணிகள் :அமைச்சா் திறந்து வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
முடிவுற்ற திட்டப் பணிகள் :அமைச்சா் திறந்து வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடிவுற்ற பணிகளை திறந்துவைத்து, பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது:

மறமடக்கியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டடப் பணி, சேந்தன்குடியில் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி கட்டடப் பணி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், கொடிவயல் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கலையரங்க கட்டடப் பணி மற்றும் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பயணியற் நிழற்குடை பணி, அமரசிம்மேந்திரபுரத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு உயா்நிலைப்பள்ளி சுற்றுச்சுவா் பணி ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியா் சு.சொா்ணராஜ், ஒன்றியக்குழுத் தலைவா்கள் மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com