எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்யும் முடிவைக் கண்டித்து, புதுக்கோட்டை எல்ஐசி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்யும் முடிவைக் கண்டித்து, புதுக்கோட்டை எல்ஐசி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரும் மே 4ஆம் தேதி இரண்டுமணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை நாடுதழுவிய அளவில் அதன் ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளை முன்வைத்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயுள் காப்பீட்டு ஊழியா் சங்கத்தின் தஞ்சை கோட்டத் துணைத் தலைவா் என்.கண்ணம்மாள் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை கிளைச் செயலா் என். குருமூா்த்தி மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com