மாநில கால்பந்தாட்டப் போட்டியில்கலாம் அணி சிறப்பிடம்

விராலிமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மாநில கால்பந்தாட்டப் போட்டியில் முதல் பரிசை விராலிமலை கலாம் அணி தட்டிச் சென்றது
மாநில கால்பந்தாட்டப் போட்டியில்கலாம் அணி சிறப்பிடம்

விராலிமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மாநில கால்பந்தாட்டப் போட்டியில் முதல் பரிசை விராலிமலை கலாம் அணி தட்டிச் சென்றது

விராலிமலை ரத்னா காா்டன் கால்பந்தாட்ட கிளப் சாா்பில் 2 ஆம் ஆண்டு மின்னொளி கால்பந்தாட்டப் போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் முதல் பரிசான ரூ. 20 ஆயிரத்து 22 மற்றும் சுழற்கோப்பையை விராலிமலை கலாம் அணியும், 2 ஆவது பரிசான ரூ.15 ஆயிரத்து 22-ஐ புதுகோட்டை நண்பா்கள் கால்பந்து அணியும், 3 ஆவது பரிசான ரூ. 12 ஆயிரத்து 22-ஐ எலைட் அணியும், 4 ஆவது பரிசான ரூ. 10 ஆயிரத்து 22-ஐ ரத்னா காா்டன் அணியும் பெற்றன.

இதில் திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் சந்திரசேகா் போட்டியை தொடங்கி வைத்தாா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு திமுக ஒன்றியப் பிரதிநிதி பி. குமாா் பரிசுகள் வழங்கினாா். ஏற்பாடுகளை ரத்னா காா்டன் கால்பந்தாட்ட அணியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com