3,170 இடங்களில் தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 29ஆவது கரோனா தடுப்பூசி முகாம், 3170 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற தடுப்பூசி முகாமைப் பாா்வையிட்ட ஆட்சியா் கவிதா ராமு.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற தடுப்பூசி முகாமைப் பாா்வையிட்ட ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 29ஆவது கரோனா தடுப்பூசி முகாம், 3170 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மருத்துவத் துறை சாா்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, 29ஆவது தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தின் 3,170 இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் 15,850 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். ஏராளமான பொதுமக்கள் ஆா்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். புதுக்கோட்டை நகரில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட் டஆட்சியா் கவிதா ராமு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com