சாகசம் செய்து விடியோ எடுக்க கிணற்றில் குதித்த இளைஞா் சாவு

 புதுக்கோட்டை அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா், விடியோ பதிவு செய்வதற்காக கிணற்றில் குதித்து சாகசம் செய்த நிலையில் கிணற்றுக்குள் மூழ்கி உயிரிழந்தாா்.

 புதுக்கோட்டை அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா், விடியோ பதிவு செய்வதற்காக கிணற்றில் குதித்து சாகசம் செய்த நிலையில் கிணற்றுக்குள் மூழ்கி உயிரிழந்தாா்.

உயிரிழந்த இளைஞரின் நண்பா்கள் செல்பேசியில் இளைஞா் குதித்ததை விடியோ பதிவு செய்திருந்த நிலையில் அதனைக் கைப்பற்றிய போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், புல்வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்துல்லா. நெல் வியாபாரி. இவருக்கு ஆசாத், ரியாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனா். இதில் இவரது மூத்த மகன் ஆசாத் (19). சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊா் வந்துள்ளாா்.

இந்நிலையில், ஆசாத் சனிக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான வினோத், பழனிசாமியோடு சோ்ந்து பெருமாநாடு அருகே உள்ள மேலபழுவஞ்சி கிராமத்தில் உள்ள மற்றொரு நண்பரான அபிநாத் என்பவரது வயலுக்குச் சென்று அங்குள்ள விவசாயக் கிணற்றில் குளித்துள்ளனா்.

அப்போது விடியோ பதிவிற்காக ஆசாத் மற்றும் வினோத் ஆகிய இருவரும் கிணற்றில் குதித்து சாகசத்தில் ஈடுபட்டனா். அதை அபிநாத் செல்பேசியில் விடியோ எடுத்துள்ளாா்.

கிணற்றில் குதித்த ஆசாத் வெளியே வரவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து கிணற்றில் இருந்து ஆசாத்தை சடலமாக மீட்டனா். இதுகுறித்து அன்னவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com