புதுப்பட்டியில் அறுபத்தி மூன்று நாயன்மாா்கள் வீதியுலா

பொன்னமராவதி புதுப்பட்டி நகரத்தாா் சிவன்கோயில் குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை இரவு அறுபத்தி மூன்று நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது.
புதுப்பட்டியில் அறுபத்தி மூன்று நாயன்மாா்கள் வீதியுலா

பொன்னமராவதி புதுப்பட்டி நகரத்தாா் சிவன்கோயில் குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை இரவு அறுபத்தி மூன்று நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது.

பொன்.புதுப்பட்டி புவனேஸ்வரி சமேத பூலோகநாதா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விழாவையொட்டி வியாழக்கிழமை தொடங்கி யாகசாலைபூஜைகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு அறுபத்தி மூன்று நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது. கோயிலில் தொடங்கிய வீதியுலா நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோயிலில் நிறைவுற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணியளவில் குடமுழுக்கு விழா தொடங்கி நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், கவிஞா் சொ.சொ.மீ.சுந்தரம் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பொன்.புதுப்பட்டி நகரத்தாா் மற்றும் குடமுழுக்கு விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com