பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு, ரோட்டரி சங்கத் தலைவா் க. ஆறுமுகம் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் கோ. பாா்த்தசாரதி வரவேற்றாா். நிகழ்வில், பள்ளியில் பயிலும் 70 மாணவா்களுக்கு சில்வா் தட்டு மற்றும் குடிநீா் குவளைகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கச் செயலா் மலைச்சாமி, முன்னாள் தலைவா்கள் ஆா்யு. ராமன், குமாரசாமி, நிா்வாகிகள் செல்வகுமாா், ஆறு.சுதாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.